Vettri

Breaking News

பெண்களுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்த சட்டவிரோத பன்றி இறைச்சி கடை 5 பெண்கள் கைது!!




 ஜா - எல , உடவெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பெண்களுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்த சட்டவிரோத பன்றி இறைச்சி கடை ஒன்றிலிருந்து 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்டவர்கள் நீர்கொழும்பு , கொச்சிக்கடை , சீதுவை மற்றும் ஜா - எல ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 35 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களாவர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களில் ஒருவர் வட்டிக்கு பணம் கொடுப்பவர் என்பதோடு ஏனைய இருவரும்  பன்றி பண்ணை ஒன்றை நடத்தி வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையில் சந்தேக நபர்களிடமிருந்து 30,900 ரூபா பணம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜா - எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments