Vettri

Breaking News

24 மணி நேரத்தில், 986 பேர் கைது !!




 நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில், 986 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



அவர்களில் 10 பேர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், போதைப்பொருட்களுக்கு அடிமையான 18 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த காலப்பகுதியில், 586 கிலோகிராம் ஹெரோயின், 40,500 கஞ்சா செடிகள் மற்றும் 44 போதை மாத்திரைகள் என்பவற்றுடன் பல்வேறு போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் மற்றும் விசேட பணியகத்தினால் தேடப்பட்டு வந்த 25 சந்தேகநபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments