Vettri

Breaking News

1,500 தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன !





 இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் காரணமாக உள்நாட்டில் உள்ள 1,500 தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தெங்கு மற்றும் தெங்கு சார்ந்த உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டின் வருடாந்த தேங்காய் எண்ணெய்க்கான கேள்வி, 2 இலட்சத்து 40 ஆயிரம் மெட்ரிக் தொன் ஆகும். இந்தநிலையில், ஒரு கோடி 77 இலட்சம் கிலோகிராம் அளவில் தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகின்றது. இதற்காக 7 ஆயிரத்து 891 மில்லியன் ரூபா செலவிடப்படுவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் தமது தொழிற்துறை பாரியளவில் பாதிப்படைந்துள்ளதாக, தெங்கு மற்றும் தெங்கு சார்ந்த உற்பத்தியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

No comments