Vettri

Breaking News

கொழும்பின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் : டுப்ளிகேசன் வீதியில் மரம் முறிந்து வீழ்ந்துள்ளது





 கடும் மழைகாரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினாலும் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாலும் கொழும்பின் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து  நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வாகனங்களை அவதானமாக செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

டுப்ளிகேசன் வீதியில் பாரியமரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது இதனால் குறித்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகின்றது.

அத்துடன் ஆர்மர் வீதி, கொட்டாஞ்சேனை, யூனியன் பிளேஸ், புறக்கோட்டை பகுதி, மருதானை ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகின்றன.

No comments