Vettri

Breaking News

வங்கி ஒன்றின் நிறைவேற்று அதிகாரி குளியலறையில் சடலமாக மீட்பு!





பன்னிப்பிட்டிய, மாலபல்ல பிரதேசத்தில் மாடி வீடொன்றின் மேல்தள குளியலறையில் சில நாட்களுக்கு முன்னர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் ஹோமாகம டென்ஸில் கொப்பேகடுவ மாவத்தையைச் சேர்ந்த சுதத் சிந்தக ரூபசிங்க (39) என்பவராவார். இவர் தனியார் வங்கியொன்றின் நிறைவேற்று அதிகாரி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த வீட்டிலிருந்து கடும் துர்நாற்றம் வீசியதால் ஒருவர் 119 என்ற அவசர பொலிஸ் இலக்கத்துக்கு வழங்கிய தகவலின் பேரில் பொலிஸார் அங்கு சென்று அறையின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று குறித்த நபரின் சடலத்தை மீட்டுள்ளனர்.  

அவ்வீட்டில் இவர் தனிமையில் வசித்து வந்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

No comments