Vettri

Breaking News

உணவு புரைக்கேறியதால் இளைஞன் உயிரிழப்பு : யாழில் சம்பவம்




 யாழ்ப்பாணத்தில் புட்டு சாப்பிடும் போது புரைக்கேறியதால் இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் (15)  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பருத்தித்துறை - கற்கோவளம் பகுதியை சேர்ந்த இராசரத்தினம் சுமணன் (வயது 21) எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

புட்டு புரைக்கேறியதால்

குறித்த இளைஞன் வீட்டில் புட்டு சாப்பிட்ட போது , அது புரைக்கேறி உள்ளது. அதனை தொடர்ந்து தனக்கு நெஞ்சு அடைப்பதாக கூறிய போது, வீட்டிலுள்ளவர்கள் சுடுநீர் குடிக்க கொடுத்துள்ளனர்.

உணவு புரைக்கேறியதால் இளைஞன் உயிரிழப்பு : யாழில் சம்பவம் | The Death Of A Young Man Who Stole Food Jaffna

சில நிமிடங்களில் இளைஞன் மயங்கி விழுந்ததை அடுத்து , இளைஞனை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது , இளைஞன் உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற உடற்கூற்று பரிசோதனையில் , சுவாச குழாய்க்குள் உணவு மாதிரிகள் காணப்பட்டதை அடுத்து , சுவாச குழாய்க்குள் உணவு பதார்த்தம் அடைத்து கொண்டமையாலையே மரணம் சம்பவித்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது. 

No comments