Vettri

Breaking News

உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் தமிழர் இவர் தான்..!




 உலகின் தலைசிறந்த தேடுபொறியாக இருக்கும் கூகுள் நிறுவன தலைமை நிறைவேற்று அதிகாரியாக(ceo) திகழும் சுந்தர் பிச்சை, கோடிகளில் சம்பளம் பெறும் தமிழர்களில் ஒருவராக திகழ்கிறார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் உலகின் பணக்கார நிர்வாகிகளில் ஒருவராகவும் திகழ்கிறார்.

சுந்தர் பிச்சை மதுரையில் பிறந்தவர். அவரது தாயார் லட்சுமி ஒரு ஸ்டெனோகிராபர். இவருடைய தந்தை ரெகுநாத பிச்சை ஒரு மின் பொறியாளர்.

கூகுளில் தயாரிப்பு மேலாளர்

மதுரையில் பள்ளி படித்த இவர், ஐஐடி காரக்பூரில் உலோகவியலில் பொறியியல் படித்தார். அவர் தனது படிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றவர்.

பின்னர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருள் அறிவியலில் எம்.எஸ். பின்னர் வார்டன் பள்ளியில் எம்பிஏ படித்தார்.

2004 ஆம் ஆண்டு கூகுளில் தயாரிப்பு மேலாளராக சேர்ந்தார். கூகுள் குரோம் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றினார். 2008 இல், அவர் துணைத் தலைவர் பதவிக்கு மாற்றப்பட்டார்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, கூகுள் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரானார். 2014 இல், அவர் தயாரிப்பு தலைவரானார்.

உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் தமிழர் இவர் தான்..! | Top Salary Gets Tamils Sundar Pichai Salary

பின்னர், 2015 இல் Google இன் நிறுவன தலைமை அதிகாரி ஆனார். அது மட்டும் இல்லாமல் 2019 இல், கூகுள் நிறுவனத்தில் தாய் நிறுவனமான Alphabet Inc இன் CEO ஆனார்.

மாதாந்த சம்பளம் 

இவ்வளவு பெரிய பதவியில் இருக்கும் சுந்தர் பிச்சையின் சம்பளம் 2022 இல் 226 மில்லியன் டொலர்களாக இருந்தது. இதன் இந்திய ரூபாய் மதிப்பு சுமார் ரூ.1869 கோடிகளாகும்.

உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் தமிழர் இவர் தான்..! | Top Salary Gets Tamils Sundar Pichai Salary

இவை மட்டும் இல்லாமல் 2019 ஆம் ஆண்டில், அவர் 281 மில்லியன் டொலர்கள் பரிசுத் தொகையாக பெற்றார்.

2022 இல் அவரது சொத்தின் நிகர மதிப்பு 1310 மில்லியன் டொலர்களாக இருக்கின்றது. மேலும், அவரது வீடு மட்டும் 4,429 சதுர அடி பரப்பளவில் ரூ.10,215 கோடி மதிப்பிலானதாக இருக்கிறது.

No comments