Vettri

Breaking News

யாழ்ப்பாணத்தை குறிவைக்கும் சீனா!




 லங்கையில் வடக்கில் அதிகளவான முதலீடுகளை மேற்கொள்ள சீன முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுகின்றார்கள் என இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (06) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் உலருணவுப் பொதிகளை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பொருளாதார நெருக்கடியின் போது

"இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நான் வடக்கு மாகாணத்திற்கு வந்துள்ளேன், சீன பௌத்த மக்களால் வழங்கப்பட்ட 5000 உலருணவுப் பொதிகளை வடக்கு மாகாண மக்களுக்கு வழங்க வந்துள்ளேன்.

அதில் இன்று (06) யாழில் நெடுந்தீவு பிரதேச மக்களுக்காக 500 உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்ததில் மகிழ்ச்சியாகவுள்ளது.

யாழ்ப்பாணத்தை குறிவைக்கும் சீனா! | China Plan To Invest Sri Lankas Northern Province

கடந்த முறை வடக்கிற்கு விஜயம் மேற்கொண்ட போது வடக்கின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கினோம்.

பொருளாதார நெருக்கடியின் போது இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு முதலாவதாக சீனாவே கை கொடுத்தது, எதிர்காலத்திலும் சீனா கை கைகொடுக்கும்.

உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள நட்புறவின் அடிப்படையிலேயே இந்த உதவிகளை நாங்கள் செய்து வருகிறோம்.

கடலுணவு ஏற்றுமதி

மேலும், 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான உதவிகளை சீனா உங்களுக்கு வழங்கவுள்ளது, அதில் 5 மில்லியன் ரூபாய் உணவு பொருட்களுக்காகவும் 5 மில்லியன் ரூபாய் கடற்தொழிலாளர்களுக்காகவும் 5 மில்லியன் ரூபாய் வீட்டு திட்டத்திற்காகவும் வழங்கப்படவுள்ளது.

மேலும், அண்மையில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க சீனா வந்திருந்த போது, இலங்கை கடலுணவை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டார்.

யாழ்ப்பாணத்தை குறிவைக்கும் சீனா! | China Plan To Invest Sri Lankas Northern Province

ஆனால் சீனாவில் இருந்து இலங்கைக்கு கடலுணவு இறக்குமதி செய்யப்படாது, விசேடமாக வடக்கு மாகாணத்திற்கு கடலுணவு இறக்குமதி செய்யப்படாது.

சீனா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக இருப்பதால் மிகப்பெரிய சந்தை வாய்ப்பு காணப்படுகிறது, உங்களை அதற்கே வரவேற்கிறோம்.

அதுமாத்திரமல்லாமல் சீன தொழிற்துறையினர் மற்றும் முதலீட்டாளர்கள் வடக்கில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வமாக உள்ளார்கள். வடக்கு மக்களும் அதனை வரவேற்க தயாராகவுள்ளனர் என்று நம்புகிறேன்." என அவர் தெரிவித்தார்.  

No comments