Vettri

Breaking News

பலாங்கொடை மணசரிவில் சிக்கி காணாமல்போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் சடலங்களாக மீட்பு!




 



பலாங்கொடை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு காணாமல்போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலாங்கொடை – கவரன்ஹேன – வெயின்தென்ன பகுதியில் கடந்த 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட மண் சரிவில் சிக்குண்டு காணாமல்போயிருந்தவர்களே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இரண்டு நாட்களின் பின் குறித்த நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments