Vettri

Breaking News

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை: பொது மக்களுக்கு எச்சரிக்கை




 நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்றும் பி.ப. 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேல், வடமத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி கிடைக்கும் சாத்தியம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை: பொது மக்களுக்கு எச்சரிக்கை | Today Weather

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

குறித்த பிரதேசங்களில் மழை பெய்யும்  என எதிர்வு கூறப்பட்டுள்ள நேரம்

அனுராதபுரம் - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

மட்டக்களப்பு - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை 

கொழும்பு - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

காலி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை 

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை: பொது மக்களுக்கு எச்சரிக்கை | Today Weather

யாழ்ப்பாணம் - மழை அல்லது இடியுடன் கூடிய மழை

கண்டி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழைஅல்லது இடியுடன் கூடிய மழை 

நுவரெலியா - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை 

இரத்தினபுரி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

திருகோணமலை - மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments