ஊர்வலத்துக்கு அழைத்து வரப்பட்ட சீத்தாவை காட்டு யானை என நினைத்து துப்பாக்கிப் பிரயோகம் செய்த வனஜீவராசி அதிகாரிக்குப் பிணை!
ஊர்வலத்துக்கு அழைத்து வரப்பட்ட 'சீதா' என்ற யானையை துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்திய குற்றச்சாட்டில் பணி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிக்கு நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
மஹியங்கனை எசல பெரஹெரவில் கலந்துகொண்ட சீதாவை காட்டு யானை என நினைத்து மாபகதேவாவ வனஜீவராசிகள் அலுவலக சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதனையடுத்து, அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சந்தேக நபரை ஒரு இலட்சம் ரூபாய் பிணையில் விடுவிக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
No comments