Vettri

Breaking News

கொழும்பு உயர்நீதிமன்ற முன்றலில் மாபெரும் கண்டனப் போராட்டம்




 கொழும்பு உயர்நீதிமன்ற முன்றலில் எதிர்வரும் 09ஆம் திகதி மாபெரும் கண்டனப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதிபதி ரீ. சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, வடக்கு – கிழக்கு சட்டத்தரணிகள் சங்கங்களைச் சார்ந்த சட்டத்தரணிகள் மற்றும் தென்பகுதி சட்டத்தரணிகளையும் அழைத்து கண்டனப் போராட்டத்தை நடாத்தவுள்ளனர்.

மாபெரும் எதிர்ப்பு

வடக்குக் கிழக்கின் எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த பெருமளவிலான சட்டத்தரணிகளும் தென்பகுதியைச் சேர்ந்த சட்டத்தரணிகளும் இப்போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு உயர்நீதிமன்ற முன்றலில் மாபெரும் கண்டனப் போராட்டம் | Protest In Front Of Colombo High Court

No comments