Vettri

Breaking News

தளபாட விற்பனை நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து 75 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பணம் கொள்ளை..




 மீகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள தளபாட விற்பனை நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்த இருவர் ஊழியர்களிடத்தில் துப்பாக்கியைக் காண்பித்து அச்சுறுத்தி 75 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

குறித்த தளபாட விற்பனை நிலையத்தின் உரிமையாளர் மீகொட பொலிஸில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மீகொட, 20 இலக்க கட்டைப் பகுதியில் அமைந்துள்ள தளபாட விற்பனை நிலையத்தில் நேற்று முன்தினம் நண்பகல் 2 மணி அளவில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வருகை தந்த இருவர்  தலைக்கவசம் அணிந்து அங்கிருந்த ஊழியர்களிடத்தில் துப்பாக்கியைக் காண்பித்து அச்சுறுத்தி   பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.





சந்தேக நபர்கள் இருவரும் பணியாளர்களை இரண்டாம் மாடிக்கு அழைத்து சென்று பணம் சேமித்து வைக்கப்பட்டிருந்த பெட்டகத்தின் இரகசிய இலக்கத்தை பெற்றுக்கொண்டு அங்கிருந்து சுமார் 75 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விற்பனை நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மீகொட பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

No comments