Vettri

Breaking News

உறவினரின் மகள் பாலியல் துஷ்பிரயோகம் : ஓய்வு பெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரிக்கு 15 வருடச் சிறைத் தண்டனை!




 தனது உறவினரின்  மகளை பாலியல் துஷ்பிரயோகம்  செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஓய்வு பெற்ற  சிரேஷ்ட  இராணுவ அதிகாரி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி  ஆதித்ய படபெத்திகே 15 வருட கடூழியச்  சிறைத்  தண்டனை விதித்தார்.

24 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குற்றத்துக்காக  விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன்  இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.





2009 ஆகஸ்ட் 1 முதல் 31 ஆம் திகதிக்கு உட்பட காலத்தில் 16 வயதுக்கு உட்பட்ட தனது உறவினரின் மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சட்ட மா அதிபரால் பிரதிவாதிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தார்.

இது தொடர்பான நீண்ட விசாரணையின் முடிவில், குற்றம் சாட்டப்பட்டவர் மீதான குற்றச்சாட்டை நியாயமான சந்தேகத்துக்கு  இடமின்றி அரசு தரப்பு நிரூபித்துள்ளதாகவும், அவர் தொடர்புடைய குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

No comments