Vettri

Breaking News

வாகன இறக்குமதியாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்- வெளியாகவுள்ள வர்த்தமானி




பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. மேலும், குறித்த வாகனங்களை இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி இந்த வாரம் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது. பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் லொறிகள், பாரவூர்திகள் மற்றும் பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் இந்த வர்த்தமானி மூலம் தளர்த்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள அந்நியச் செலாவணி கையிருப்புடன் ஒப்பிடுகையில் மற்ற வாகனங்களின் இறக்குமதி மேலும் தாமதமாகும் என நிதி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வாகன இறக்குமதியை துரிதப்படுத்துவதன் மூலம் டொலரின் பெறுமதி மீண்டும் உயர முடியும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தநிலையில், கடந்த வருடம் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார நெருக்கடிகளால் வாகன இறக்குமதிகள் முற்றாக தடை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments