Vettri

Breaking News

இன்று பல பிரதேசங்களில் மழை பெய்யும் சாத்தியம்..




 


மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, கிழக்கு, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களில் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன்,  நாட்டின் மற்றைய பகுதிகளில் முக்கியமாக சீரான வானிலை நிலவும்  என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடல் 

கொழும்பில் இருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும்.

காற்று தென்மேற்கு திசையில் மணிக்கு 30 தொடக்கம் 40 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும்.

அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையிலும் புத்தளம் முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையிலும் புத்தளம் முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

No comments