Vettri

Breaking News

கொழும்பு மாநகர சபையின் அறிவித்தல்..







சீருடை அல்லது உத்தியோகபூர்வ அடையாள அட்டை இன்றி கொழும்பு மாநகரில் வாகனங்களை நிறுத்துவது தொடர்பான பணம் சேகரிக்க வரும் மக்களுக்கு பணம் வழங்க வேண்டாம் என கொழும்பு மாநகர சபை அறிவித்தல் விடுத்துள்ளது.


அவ்வாறான அனுமதியற்ற அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு அதன் பிரதிப் பணிப்பாளர் பொறியியலாளர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.



வாகனம் நிறுத்துமிடத்தில் வாகனத்தை நிறுத்திய பின்னர் 5 நிமிடங்கள் அவகாசம் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் வாகனம் நிறுத்துமிடத்தை விட்டு வெளியேறும் போது பணம் வசூலிக்கும் நபர் இல்லை எனில் பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments