Vettri

Breaking News

இலங்கையின் மற்றுமொரு கிரிக்கெட் வீரருக்கும் உபாதை!




 இலங்கை கிரிக்கெட் அணியின் மற்றுமொரு வீரரும் உபாதையால் பாதிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 30 ஆம் திகதி ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், தற்போது வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்கவும் முதுகு உபாதையால் பாதிக்கப்பட்டுள்ளார்.




இதனால் 31 ஆம் திகதி கண்டி பல்லேகலவில் இடம்பெறவுள்ள பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் டில்ஷான் மதுங்க பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இலங்கை அணியின் துஷ்மந்த ஷாமிர தோள்பட்டை உபாதையாலும் வனிந்து ஹசரங்க தொடைப்பிடிப்பாலும் லகிரு குமார காயம் மற்றும் முதுகு வலியாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அத்துடன் குசல் ஜனித் பெரேரா மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

துஷ்மந்த ஷாமிரவுக்குப் பதிலாக கசுன் ராஜிதவும் டில்ஷான் மதுஷங்கவுக்குப் பதிலாக பினுர பெர்னாண்டோவும் அணியில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

No comments