Vettri

Breaking News

மாதாந்த கொடுப்பனவுகளை வழங்குவதற்காக 2,684 மில்லியன் ரூபா மாவட்ட செயலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது!!!




முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு மாதாந்த கொடுப்பனவுகளை வழங்குவதற்காக மாவட்ட செயலகங்களுக்கு 2,684 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவுகள் வெள்ளிக்கிழமை முதல் பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கப்படவுள்ளது. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் முதியோர்களுக்கான கொடுப்பனவுகள் தபால் நிலையங்கள் மூலம் வழங்கப்படும்.

No comments