Vettri

Breaking News

13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்! பாராளுமன்றில் ஜனாதிபதி..




 




நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையில் வலியுறுத்தினார்.

இதனை அடைவதற்கு திறந்த மனதுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தி, பாராளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இன்று பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது ,

13 ஆவது திருத்தத்தில் உள்ள குறைபாடுகளை நாங்கள் பார்க்கவேண்டும்.ஏனைய நாடுகளின் அதிகாரப் பகிர்வை நாங்கள் ஆராய வேண்டும்.வருடாந்தம் மாகாண சபைகளுக்கு 500 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது. அதனால் நன்மைகள் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.

ஆனாலும் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை புறந்தள்ள முடியாது.

No comments