Vettri

Breaking News

மோட்டார் சைக்கிள் விபத்து : மாணவர்கள் இருவர் பலி!!!




மாதம்பை – தம்பகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 16 வயதுடைய மாணவர்களே இந்த விபத்தில் உயிரிழந்தனர். மாணவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகத்தினை கட்டுப்படுத்த முடியாது மின்கம்பத்தில் மோதுண்ட நிலையில் மாணவர்கள் படுகாயமடைந்தனர் இந்த நிலையில் மாணவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments